திறந்த பல்கலையின் சட்டமானி பரீட்சை எழுதியவர்களுக்கான அறிவித்தல்

திறந்த பல்கலையின் சட்டமானி பரீட்சை எழுதியவர்களுக்கான அறிவித்தல்

இலங்கை திறந்த பல்கைலக்iழைத்தின் சட்டமானிப் பட்டப்படிப்பினை தொடர்வதற்காக கடந்த 2021.11.14ஆம் திகதி நடைபெற்ற தெரிவுப் பரீட்சை – 2021 இன் இல. 02 ஆங்கில மொழி வினாப்பத்திரம் செல்லுபடியற்றது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன அறிவித்துள்ளார்.

குறித்த வினாப்பத்திர பரீட்சை எதிர்வரும் 2022.02.05ஆம் திகதி நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டார்.

அதற்கான பரீட்சை அட்டைகள் விரைவில் அனுப்பிவைக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.