கொழும்பு மாநகர சபைக்கு சங்காய் மாநகர அரசினால் மருத்துவ பொருட்கள் அன்பளிப்பு

கொழும்பு மாநகர சபைக்கு சங்காய் மாநகர அரசினால் மருத்துவ பொருட்கள் அன்பளிப்பு

கொழும்பு மாநகர சபைக்கு சீனாவின் சங்காய் மாநகர அரசின் வெளிவிவகார அலுவலகத்தினால் மருத்துவப் பொருட்கள் அன்பளிப்பு செய்யப்பட்டன.

இந்த பொருட்கள் கொழும்பிலுள்ள சீன தூதுவராலயத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டன.

20,000 KN95 முகக் கவசங்கள், 210 தனிநபர் பாதுகாப்பு அங்கி மற்றும்  300 பாதுகாப்பு கண்ணாடிகள் ஆகியன வழங்கப்பட்டன.

இந்த பொருட்கள் கொழும்பு மேயர் ரோசிவிடம் கொழும்பிலுள்ள சீன தூதுவராலயத்தின் ஊடகப் பேச்சாளரும் அரசியல் பீட தலைமை அதிகாரியுமான Luo Chong இனால் உத்தியோகபூர்வமாக கடந்த சனிக்கிழமை கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கொழும்பு மாநகர ஆணையாளர் ரோசானி திசாயாக்க, பிரதம வைத்திய அதிகாரி வைத்தியர் ருவான் விஜயமுனி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.