'சர்வதேச அமைப்புக்கள் அநாவசியமாக அழுத்தம் கொடுத்தால் அதிலிருந்து வெளியேற தயார்'

'சர்வதேச அமைப்புக்கள் அநாவசியமாக அழுத்தம்  கொடுத்தால் அதிலிருந்து வெளியேற தயார்'

எந்தவொரு சர்வதேச அமைப்பும் தொடச்சியாக நமது நாட்டையும் யுத்த வெற்றி வீரர்களையும் குறி வைத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தால், குறித்த அமைப்பு அல்லது ஸ்தாபனங்களிலிருந்து வெளியேற தயங்கமாட்டேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (10) செவ்வாய்க்கிழமை அறிவித்தார்

பாராளுமன்றத்திற்கு அருகிலுள்ள இராணுவ வீரர்களின் நினைவுத் தூபி அருகில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.