கண்டி தேசிய வைத்தியசாலைக்கு முஸ்லிம் குடும்பத்தினால் 203 பேர்ச் காணி அன்பளிப்பு

கண்டி தேசிய வைத்தியசாலைக்கு முஸ்லிம் குடும்பத்தினால் 203 பேர்ச் காணி அன்பளிப்பு

தேசிய வைத்தியசாலையாக இன்று (30) புதன்கிழமை தரமுயர்த்தப்பட்ட கண்டி வைத்தியசாiலைக்கு முஸ்லிம் வர்த்தக குடும்பத்தினால் 203 பேர்ச் (ஒரு ஏக்கரும் 40 பேர்ச்) காணி அன்பளிப்பு செய்யப்பட்டது.

வைத்தியசாலை தரமுயர்த்தல் நிகழ்வு இன்று கண்டி தேசிய வைத்தியசாலையின் வளாகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர்களான ராஜித சேனாரத்ன மற்றும் லக்ஷ்மன் கிரியெல்ல உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கண்;டி முஸ்லிம் ஹோட்டேல் என்று அழைக்கப்படும் குடும்பத்தினால் 203 பேர்ச் காணி, கண்டி தேசிய வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.