23 இந்திய மீனவர்கள் விடுதலை

23 இந்திய மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த ஒக்டோபர் 13ஆம் திகதி கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களும் இன்று (15) திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் நாகப்பட்டினம் பகுதியியினைச் சேர்ந்த இவர்கள், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர் செய்யப்பட்ட போது விடுதலை செய்யப்பட்டனர்.

காரைநகர் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் யாழ். சிறைச்சாலைக்கு இடமாற்றப்பட்டனர். இவ்வாறன நிலையிலேயே இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விரைவில் இவர்கள் அனைவருக்கும் இந்தியாவிற்கு அனுப்பிவைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.