முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் பேரில் போலி அறிக்கை

முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் பேரில் போலி அறிக்கை

தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான  ஏ.எல்.எம். அதாஉல்லாவின் பேரில் போலி அறிக்கையொன்று சமூக ஊடகங்களில் பரப்பப்படுவதாக தேசிய காங்கிரஸ் தெரிவித்தது.

'அரச ஊழியர்களின் ஒரு மாத சம்பளத்தினை அர்ப்பணிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்த கருத்து வரவேற்கத்தக்கது' – முன்னாள் அமைச்சர் அதாஉல்லா எனத் தெரிவித்து அறிக்கையொன்று சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தது.

எனினும் இந்த அறிக்கை, அரசியல் இலாபம் பெரும் மேற்கொள்ளப்படும் மிகவும் கேவலமான செயல் எனத் தெரிவித்த தேசிய காங்கிரஸ் இந்த  வேலைகளை நிறுத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த போலி அறிக்கைக்கு எதிராக மிக விரைவில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் தேசிய காங்கிரஸின் பொருளாளர் ஜே.எம்.வஸீர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் சதிகாரர்களின் இவ்வாறான போலியான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ செய்திகள் அனைத்தும் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் அல்லது கட்சியின் உத்தியோகபூர்வ பக்கத்தில் பிரசுரமாகும் என்பதனை தேசிய காங்கிரஸ் தெரிவித்துக்கொள்கின்றது.