கொவிட் - 19 கட்டுப்படுத்த துருக்கியினால் பாதுகாப்பு உபகரணங்கள் நன்கொடை

கொவிட் - 19 கட்டுப்படுத்த துருக்கியினால் பாதுகாப்பு உபகரணங்கள் நன்கொடை

கொவிட் - 19 கட்டுப்பாட்டு இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்கு ஆதரவாக துருக்கியினால் பாதுகாப்பு உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.

இதற்கமைய, 10 வென்டிலேட்டர்கள் மற்றும் ஒரு தொகுதி தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கான துருக்கித் தூதுவர் டெமட் செகெர்சியோக்லுவினால் குறித்த நன்கொடைகள் அண்மையில் வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந்த பெறுமதிமிக்க நன்கொடையை வழங்கியமைக்காக இலங்கை அரசாங்கத்தின் நன்றியையும், ஆழ்ந்த பாராட்டையும் துருக்கி அரசாங்கத்திற்குத் இதன்போது தெரிவித்த வெளியுறவுச் செயலாளர் கொலம்பகே, இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் பரஸ்பரம் நன்மை பயக்கும் ஒத்துழைப்பை நினைவுகூர்ந்தார்.

இந்த நிகழ்வில் வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும், கொழும்பில் உள்ள துருக்கித் தூதரகத்தின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.