ஹபுகஸ்தலாவையில் தேசிய மீலாத் - 2021 நிகழ்வு

ஹபுகஸ்தலாவையில் தேசிய மீலாத் - 2021 நிகழ்வு

நுவரெலியா மாவட்டத்தின் ஹபுகஸ்தலாவயில் 2021ஆம் ஆண்டுக்கான தேசிய மீலாத் விழா கொண்டாடுவதற்கான தீர்மானத்தை பிரதமர் k`pe;j uh[gf;\ மேற்கொண்டுள்ளார்.

தேசிய மீலாதினை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்திலுள்ள 28 பள்ளிவாயல்களின் புனர்நிர்மான வேலைகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதோடு மிக விரைவில் வேலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

ஹட்டன் நகர ஜும்ஆப் பள்ளிவாயல் நினைவு முத்திரைக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் நுவரெலியா மாவட்ட முஸ்லிம்களது வாழ்வு, வரலாறு, பாரம்பரியங்கள் பற்றிய நூல் வெளியீட்டுக்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

வழமையாக பாடசாலை மாணவர்களுக்காக நடாத்தப்படும் போட்டி நிகழ்ச்சிகள் இம்முறை தொழில்நுட்பத்தின் துணையுடன் onlineஇல் நடைபெறவுள்ளன. கடந்த வருடம் போன்று இம்முறையும் வீடியோ ஆவணப்படப் போட்டியும் நடைபெறவுள்ளது. அத்துடன் கவியரங்கு மற்றும் வெபினார் நிகழ்வுகள், மர நடுகை, விலங்கினங்களுக்கு கருணை காட்டல், அனாதைகள் மற்றும் முதியோருக்கான நிகழ்வுகள் பள்ளிவாயல்களினூடாக நடைபெறவுள்ளன.

அதேபோன்று சிங்கள மொழியில் பத்து கஸீதாக்களை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளும் நடைபெறுகின்றன. தேசிய மீலாத் தினத்தையொட்டி நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பத்து முஅத்தீன்மார்கள்  மற்றும் 10 கதீப் மார்களை தெரிவுசெய்து பாராட்டி சன்மானம்  வழங்குவதற்கான  ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளோம்.
 
கொவிட் 19 நோய்ப்பரவலை கருத்திற்கொண்டு சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி புர்தா பாடுதல் உட்பட நுவரெலிய மாவட்டத்தை மையமாக வைத்து பல்வேறு ஆண்மீக நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.

தகவல்: முஸ்லிம் சமய விவகார திணைக்களம்