எம்.பிக்களுக்கு வாகனம் வழங்கும் முன்மொழிவை நிராகரிக்கின்றேன்: சஜித்

எம்.பிக்களுக்கு வாகனம் வழங்கும்  முன்மொழிவை நிராகரிக்கின்றேன்: சஜித்

வரி செலுத்துபவர்களின் நிதியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்குவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவை ஐக்கிய மக்கள் சக்தி நிராகரிப்பதாக அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாட்டில் நிலவுகின்ற இந்த மட்டுப்படுத்தப்பட்ட நிதியத்தை அனைத்து இலங்கையர்களுக்கும் தடுப்பூசிகளை வழங்குவதற்காக பயன்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியல்வாதிகளின் வாழ்வை செழிப்பாக்குவதற்கு மக்களுக்குரிய வளத்தை பயன்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் அனுமதிக்காது எனவும், இதற்குப் பதிலாக அவ்வாறான வளங்களை நாட்டின் மேம்பாட்டுக்கும்இ அபிவிருத்திக்கும்,சுபீட்சத்துக்கும் முதலீடு செய்தல் வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கூறினார்.