கிழக்கு மாகாண பிரதம செயலாளராக மீண்டும் துசித்த பி. வனிகசிங்க நியமனம்

 கிழக்கு மாகாண பிரதம செயலாளராக மீண்டும் துசித்த பி. வனிகசிங்க நியமனம்

கிழக்கு மாகாண பிரதம செயலாளராகஇ துசித்த பி. வனிகசிங்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) பிற்பகல் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து அவர் நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

இலங்கை நிர்வாகச் சேவையின் சிரேஷ்ட அதிகாரியான துசித்த பி. வனிகசிங்க அவர்கள்இ கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்களின் செயலாளராகக் கடமையாற்றியுள்ளதுடன்இ அரச நிறுவனங்கள் பலவற்றிலும் பல்வேறு பதவிநிலைகளை வகித்தவராவார்.

2019 டிசெம்பர் மாதத்தில், கிழக்கு மாகாண பிரதம செயலாளராக அவர் பதவியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.