இரா. சாணக்கியன் உள்ளிட்ட எழுவருக்கு கல்முனை நீதிமன்றினால் அழைப்பாணை

இரா. சாணக்கியன் உள்ளிட்ட எழுவருக்கு கல்முனை நீதிமன்றினால் அழைப்பாணை

-பாறுக் ஷிஹான்-

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான  இரா. சாணக்கியன்  கோ. கருணாகரம் டி.கலையரசன்  உள்ளிட்ட எழுவரை எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றினால் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்து கொள்வார்கள் என கூறி கல்முனை பொலிஸ் நிலையத்தினால் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 29 பேருக்கு கல்முனை நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது.

எனினும், குறித்த உத்தரவினை மீறி பேரணி இடம்பெற்றது. இதனையடுத்தே மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட  எழுவருக்கு  எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றில் வழக்கொன்று கல்முனை பொலிஸாரினால்  கடந்த பெப்ரவரி 5ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு மீதான விசாரணை   கல்முனை நீதவான் ஐ.ஏன் றிஸ்வான் முன்னிலையில் இடம்பெற்றது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான  இரா. சாணக்கியன், கோ.கருணாகரம்,  டி.கலையரசன், முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன் மாணவர் மீட்பு பேரவை தலைவர் செ.கணேசானந்தன்,  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி துணைச் செயலாளர் அ.நிதான்சன் ஆகியோரை  எதிர்வரும் ஏப்ரல் மாதம்  30ஆம் திகதி   மன்றில் ஆஜராகுமாறு கல்முனை நீதவான் அழைப்பாணை பிறப்பித்துள்ளார்.