லிற்ரோகாஸினால் திறைசேரிக்கு 1.5 பில்லியன் ரூபா பங்கு இலாபம்

லிற்ரோகாஸினால் திறைசேரிக்கு 1.5 பில்லியன் ரூபா பங்கு இலாபம்

இலங்கையின் தேசிய திரவப் பெற்றோலிய வாயு வழங்குனரான லிற்ரோகாஸ் லங்கா லிமிடட் தனது பிரதான பங்குதாரரான இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத் தாபனத்தின் ஊடாக 1.5 பில்லியன் ரூபா பங்கு இலாபத்தை திறைசேரிக்கு வழங்கிப் பாரிய பங்களிப்பை மேற்கொண்டுள்ளது.

மூலோபாய முகாமைத்துவம், வினைத்திறன் மற்றும் பொதுமக்களின் தேவைகளுக்காகப் பணியாற்றும் அர்ப்பணிப்பு போன்றவையே இலாபமீட்டும் ஒரு சில அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களில் ஒன்றான லிற்ரோ நிறுவனத்தின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தள்ளன.

திரவப் பெற்றோலிய வாயு வழங்குநரின் விவேகமான நிதி நடைமுறைகள் அரசாங்கத்தின் திறைசேரிக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க இடமளித்திருப்பதுடன், பொது நிதி தேவைகளுக்கு நிதியளிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்குத் தேவையான ஊக்கத்தையும் இது அளிக்கிறது.

இக்கட்டான சூழ்நிலையில் சிறப்பான பங்களிப்பின் மூலம் அரசாங்கத்தைப் பலப்படுத்த முடிந்தமை குறித்து லிற்ரோகாஸ் லங்கா நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், "அரசுக்குச் சொந்தமான நிறுவனம் என்ற ரீதியில் நாம் எப்பொழுதும் மக்களின் நலன்புரிக்கே தொடர்ந்தும் முன்னுரிமை அளித்து வருகிறோம். குறிப்பாக கொவிட்-19 முடக்கங்களின் போதுவீடுகள் மற்றும் வணிகங்களுக்குத் தேவையான இடையறாத விநியோகத்தை உறுதிசெய்திருந்தோம்.

உலக சந்தையில் திரவப் பெற்றோலிய வாயுவின் விலை குறையும்போதுஅதன் நன்மையை வாடிக்கையாளர்களுக்குப் பெற்றுக் கொடுக்கக் கூடிய விலைச் சூத்திரத்தை நாம் பின்பற்றுகின்றோம். இதற்குத் தலைகீழான நிலைமை ஏற்படும்போது வாடிக்கையாளர்கள் மீது முழுமையான சுமையை ஏற்படுத்தாது செலவுக்கு மானியங்கள் வழங்குகின்றோம்" என்றார்.

நிதி ரீதியான பங்களிப்புக்கு அப்பால் திரவப் பெற்றோலிய வாயு சந்தையின் நிலையான விலையைப் பேணுவதில் உறுதியாக இருப்பதுடன், இந்த சுத்தமான மற்றும் திறமையான ஆற்றல் மூலம் உள்நாட்டில் உள்ள வீடுகளில் எரிவாயு பாவனையை அதிகரிக்கச் செய்யமுடிந்துள்ளது.

நிலையான விலை நிர்ணயம் நுகர்வோர் தங்கள் சமையல் மற்றும் வெப்பமாக்கல் தேவைகளுக்காக திரவப் பெற்றோலிய வாயுவை ஏற்றுக்கொள்ள ஊக்குவிக்கிறது, இது சுற்றுச்சூழலின் நிலைத்தன்மையை ஊக்குவிக்கிறது மற்றும் பாரம்பரிய எரிபொருட்கள் மீதான நாட்டின் நம்பகத்தன்மையைக் குறைக்கிறது.

நம்பிக்கை, நம்பகத்தன்மைமற்றும் தரம் போன்ற காரணிகளால் எரிசக்தித் துறையில் லிற்ரோகாஸ் லங்காநிறுவனம் கடந்த பல வருடங்களாக நற்பெயரைக் கட்டியெழுப்பியுள்ளது.

நிறுவனத்தின் விரிவாக்கப்பட்ட விநியோக வலையமைப்பு மற்றும் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்ட அணுகுமுறை என்பன இலங்கையின் திரவப் பெற்றோலிய வாயு தீர்வுக்கான சிறந்த தெரிவாக லிற்ரோவை மாற்றியுள்ளது.

புத்தாக்கம் மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றம் குறித்த லிற்ரோவின் உறுதிப்பாடு தொழில்துறையில் முன்னணியில் திகழ்வதற்கு வழிவகுத்திருப்பதுடன், நாட்டின் எரிசக்தித் தேவையைப் பூர்த்திசெய்வதற்கான பலத்தையும் வழங்குகிறது.